தமிழ் என்று ஓர்:-
- இன மரபு உண்டு
- மொழி மரபு உண்டு
- நாட்டு(தேச) மரபு உண்டு
- பண்பாட்டு மரபு உண்டு
- ஆட்சி மரபு உண்டு
- அரசியல் மரபு உண்டு
- கலை மரபு உண்டு
- கால (ஆண்டு) மரபு உண்டு
- எழுத்து மரபு உண்டு
- சொல் மரபு உண்டு
- பொருள் மரபு உண்டு
- இலக்கிய மரபு உண்டு
- இலக்கண மரபு உண்டு
- நூல் மரபு உண்டு
- அறிவு மரபு உண்டு
- திருக்கூட்ட மரபு உண்டு
- சமய மரபு உண்டு
- சமயங்கடந்த பொதுமரபு உண்டு
- மறைநூல் மரபு உண்டு
- முறைநூல் மரபு உண்டு
- செந்துணிபு நூன்மரபு உண்டு
- வாழ்ந்த தலைமுறை உண்டு
- வாழுந் தலைமுறை உண்டு
- வாழ்வுறும் தலைமுறை உண்டு…
இத்தனையும் இருக்கின்ற போது, ஒரு முழுமைத் தமிழ் வாழ்வியல் மரபு நெறியை நெஞ்சார இல்லை என்பவர்கள் யாராக இருக்கக் கூடும்? அதை மறைப்பதால் அவர்களுக்கு என்ன நன்மை? நமக்கு என்ன இழப்பு? இதனைக் கொஞ்சம் சிந்திக்கலாமா ?
